இளமதி - செல்வன்

இளமதி - செல்வன்

16 Mar 20
Article


இளமதி - செல்வனுக்கும், திவ்யா-இளவரசனுக்கும் அன்றே கவிஞன் பிரமிள் எழுதிவிட்டான், "உயர் ஜாதிக்காரி ஒருத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி", என்று!

பிரமிளின் 'கலப்பு' எனும் கவிதை

1. கண்கள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
மனம் அதிர்ந்தது.

கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்

பிறந்தது ஒரு
புதுமின்னல்

ஜாதியின்
கோடை மேவிப் பொழிந்தது
கருவூர்ப்புயல்…

(1972)

2. புகைகள்

உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என் பறை நகம் மோதி
ஊர் அதிர்ந்தது.

ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என் சேரி -

புகைகள் கலந்து
இருண்டது இன்றென்
உதய நெருப்பு….

(1980)

ஓவியம்: அ. செல்வம்

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi